திருக்குறள் பற்றி அறிவு பெற

திருக்குறள் பற்றி அறிவு பெற அதன் பாகங்கள், தனித்துவம், தொடர்புகள், தாக்கங்கள், நிலைப்பு, பயன்கள், மற்றும் மாற்றுகளைப் பார்! பார்த்தால் அறிவு பெறுவாய்!

Comments

  1. பள்ளிக்கூடங்கள் எதற்கு? நாம் அறிவு பெறுவதற்கு!
    பள்ளிகள் இல்லாமல் ஒருவன் அறிவு பெறமுடியாதா? முடியாது என்றால், அதற்கான காரணம் என்ன? காரணங்களைத் தெளிவு படுத்தலாம்!
    முடியும் என்றால், அதற்கான வழிமுறைகள் என்ன? வழிமுறைகளைக் கூறலாம்!
    கற்கும் முறையும், கற்பிக்கும் முறையும் ஒருவன் முழுமையாக அறிந்திருந்தால் பள்ளிக்கூடங்கள் தேவையில்லை; பயிற்சிக்கூடங்கள் இருந்தாலே போதும்! புதியசிந்தனைகள் ஊக்குவிக்கப்படும்!
    இன்றைய பள்ளிகள் எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெறும் முறையை பயிற்றுவிக்கும் பயிற்சிகூடங்களாக மாறவேண்டும்! எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெறும் முறையைப் பயிற்றுவிக்காத பள்ளிகளால் இந்த சமுதாயத்திற்கு ஏற்படும் நன்மைகளை விடத் தீமைகளே அதிகம்!
    எதுவாயினும் அதனைப்பற்றி அறிவு பெறும் முறையை அறிந்துகொண்டால், ஒருவன் playschool, pre-KG, LKG எனத் தொடக்கி UG , PG, doctorate, post-doctorate, மேலும் பல சான்றிதழ் படிப்புகள் என குறைந்த பட்சமாக 30 வருட காலத்தை கல்வி என்ற பெயரில் காலத்தையும், பணத்தையும் விரயமாக்கி தன் இளமை காலத்தை வீணடித்து பருவத்தில் செய்ய வேண்டிய காரியங்களை செய்யாமல் விட்டுவிட்டு, பின்பு பொருளாதாரத்தைத் தேடி அலைந்து அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க முடியாத விரக்தியில் (Psychological disorder) தனக்குத் தெரிந்தும் தெரியாமலும் பல தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
    1. தன் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய சிறு சிறு வேலைகளை கூட செய்யமுடியாத நிலை.
    1. போதிய பயிற்சியின்மையால், interview -வை கூட எதிர்கொள்ளமுடியாமல் போவது.
    2. அப்படியே, வேலை கிடைத்தாலும், பயிற்சி என்ற பெயரில் மீண்டும் காலம் கடந்து போவது!
    4. அடிப்படைத் தேவைகளை பெறாமல் இருப்பது
    3. இதனால், திருமணம் தடையாவது.
    4. காலங்கடந்த திருமணத்தால், குழந்தை பேற்றில் சிக்கல்
    5. இது போன்ற பல பல குழப்பங்களால் Divorce!!
    அடிப்படைப் தேவைகளை பற்றி முழுமையான பயிற்சியின்மையால், அடிப்படைத்தேவைகளையே பூர்த்தி செய்யமுடியாத அவலங்களால் பல இன்னல்கள். குறிப்பாக, சரியான உணவுகூட சரியான நேரத்தில் கலப்படமில்லாமல் சாப்பிட முடியாத சூழல். நிம்மதியாக தூங்க முடியாத நிலை! இக்காரணங்களால், நாட்டின் சட்டத்திட்ட விதிமுறைகளை மீறி நடப்பது, மற்றவர்களை அடிமையாக்கி வேலை வாங்குவது, லஞ்சம் வாங்குவது, பிறர் சொத்தை அபகரிக்க நினைப்பது, குற்றம் என்று தெரிந்தும் குற்றச்செயல்களில் ஈடுபடுவது, திருடுவது, கொலைத்தொழில் செய்வது, கொலை செய்வது, போன்ற எண்ணற்ற ஈனச் செயல்களை செய்வதற்கு (social disorder) நம் கல்வி முறை அடிப்படைக் காரணமாகிவிட்டது என்பதை நினைக்கும் பொழுது, வேதனை அளிக்கிறது. வெட்கம் அளிக்கிறது. கல்வி என்ற பெயரில் இழந்த பணத்தை ஈடுகட்ட வரதட்சினை பெறுவது, லஞ்சம் வாங்குவது நியாயப்படுத்தப் படுகிறது. இந்த கோடான கோடி மக்களின் அவல நிலையை போக்குவதற்கு, இந்த கல்வி முறையால் பொருளாதாரப் பலன் அடைந்த ஒருசிலர் விடமாட்டார்கள். சாதாரண மக்களாகிய நாம், அவர்கள் காட்டும் வழியே சரி என நினைத்து நாம் ஏமாந்து நாம் மனவேதனைப் படுவதோடு நில்லாமல், நம் குழந்தைகளும் தனிப்பட்ட psychological disorder மட்டுமல்லாமல், பல social disorder ஆவதற்கும் இனியும் காரணமாகமல் நம் குழந்தைகளையும், நம் நாட்டையும், மனித குழத்தையும் காக்க முறையாகக் கல்வி பெற்று பல உண்மையான ஆராய்ச்சிகளில் வெற்றி பெற்று அன்றாட தேவைகளை எல்லம் தங்கு தடையின்றி அனுபவிக்க கல்வி முறைகளில் மாற்றம் தேவை. பள்ளிக்கூடங்கள் பயிற்சி கூடங்களாக மாறவேண்டும் என்ற எண்ணத்தை முன்னிறுத்தி "எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெறும் முறையை" ஒரு எளிமையான சூத்திரமாக (formula) வகுத்து உங்கள் முன் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது ( www.tamil.ml ).
    யார் வேண்டுமானாலும், எந்த நாட்டவராக இருந்ததாலும், எந்த கல்வி ஜாம்பவானாக இருந்தாலும், எந்தக் கல்வித்தந்தையாக இருந்தாலும், அரசியல் அதிகாரம் பெற்றவராக இருந்தாலும், கல்வி மந்திரிகளாக இருந்தாலும், ஊடகங்கள் ஆக இருந்தாலும் (national, international) இதற்கு நேருக்கு நேரான விவாதத்தில் பங்கெடுத்து எதிர்கொள்ள நான் தயாராகத்தான் உள்ளேன். எப்படியோ, மனித குலம் நிம்மதியாகவும், சந்தோசமாகவும் இருக்க, இயற்கையின் வழி நின்று, நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் மதித்து ஒன்று பட்டு செயல்பட்டால், மனிதகுலம் பேரனந்தமான சந்தோஷத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து தொடரும் தலைமுறைகளையும் வாழ வழிகாட்ட நாம் முற்படுவோம்!
    - சிவஷண்முகம்
    13/1 அக்ரஹார மணப்பள்ளி, மணப்பள்ளி – 637017- இந்தியா
    Email: director@richmancentre.org
    Mobile: +91-9444499818




    :


    ReplyDelete

Post a Comment

TAMIL.ML ARCHIVE

  

அரளிக்காய் பற்றி அறிவு பெற

புலி பற்றி அறிவு பெற

சிங்கம் பற்றி அறிவு பெற

மயிலிறகு பற்றி அறிவு பெற

எதுவாயினும் அதனைப் பற்றி அறிவு பெற

கழுதை பற்றி அறிவு பெற

மனித உடல் பற்றி அறிவு பெற

அரளிப்பூ  பற்றி அறிவு பெற

நாகலிங்கப்பூ பற்றி அறிவு பெற

சப்பாத்திக்கள்ளி பற்றி அறிவு பெற